சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

நான்காம் ஆயிரம்   நம்மாழ்வார்  
திருவாய் மொழி  

Songs from 2899.0 to 4000.0   ( )
Pages:    Previous   1  2  3  4  5    6  7  8  9  10  Next  Next 10
வெற்பை ஒன்று எடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர்
கற்பன் வைகலே   



[2979.0]
வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே       



[2980.0]
Back to Top
கலந்து என் ஆவி
நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய்
நிலம் கொண்டானே     



[2981.0]
கொண்டான் ஏழ் விடை
உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே     



[2982.0]
ஆனான் ஆன் ஆயன்
மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில்
தான் ஆய சங்கே     



[2983.0]
சங்கு சக்கரம்
அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே     



[2984.0]
நாதன் ஞாலம் கொள்
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர்
வேத நீரனே       



[2985.0]
Back to Top
நீர்புரை வண்ணன்
சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து
ஓர்தல் இவையே       



[2986.0]
இவையும் அவையும் உவையும்
      இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
      ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
      கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
      என்னுடைச் சூழல் உளானே   



[2987.0]
சூழல் பலபல வல்லான்
      தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்று ஆகி இடந்த
      கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான்
      விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்
      அவன் என் அருகவிலானே   



[2988.0]
அருகல் இலாய பெரும் சீர்
      அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன் மேனி
      வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்
      பூமகளார் தனிக் கேள்வன்
ஒருகதியின் சுவை தந்திட்டு
      ஒழிவு இலன் என்னோடு உடனே   



[2989.0]
உடன் அமர் காதல் மகளிர்
      திருமகள் மண்மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர்
      ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி
      ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான்
      கண்ணன் என் ஒக்கலையானே   



[2990.0]
Back to Top
ஒக்கலை வைத்து முலைப் பால்
      உண் என்று தந்திட வாங்கிச்
செக்கம் செக அன்று அவள்பால்
      உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும்
      இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோற்றிய ஈசன்
      மாயன் என் நெஞ்சின் உளானே   



[2991.0]
மாயன் என் நெஞ்சின் உள்ளான்
      மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே
      காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும்
      சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன்
      என்னுடைத் தோளிணையானே     



[2992.0]
தோள் இணை மேலும் நன் மார்பின்
      மேலும் சுடர் முடி மேலும்
தாள் இணை மேலும் புனைந்த
      தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான்
      கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான்
      என்னுடை நாவின் உளானே   



[2993.0]
நாவினுள் நின்று மலரும்
      ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
      அழிப்போடு அளிப்பவன் தானே
பூ இயல் நால் தடம் தோளன்
      பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக்
      கண்ணன் என் கண்ணின் உளானே   



[2994.0]
கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
      காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்
      ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக்
      கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தொடு உலகம்
      ஆக்கி என் நெற்றி உளானே   



[2995.0]
Back to Top
நெற்றியுள் நின்று என்னை ஆளும்
      நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக்
      கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும்
      நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்
      வந்து எனது உச்சியுளானே   



[2996.0]
உச்சியுள்ளே நிற்கும் தேவ
      தேவற்குக் கண்ண பிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி
      வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன ஆயிரத்துள்ளே
      இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய
      நீள் கழல் சென்னி பொருமே   



[2997.0]
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே   



[2998.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song